குறள் 210

குறள் 210:

 

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்
மு.வ உரை:
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
சாலமன் பாப்பையா உரை:
தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.
கலைஞர் உரை:

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.


Kural 210


Arungedan Enbadhuariga Marungodi
Theevinai Seiyaan Enin

Kural Explanation: Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path

Leave a Comment