குறள் 178

குறள் 178:

 

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை 
வேண்டும் பிறன்கைப் பொருள்
மு.வ உரை:
ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.
கலைஞர் உரை:
தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.

Kural 178


Aghkaamai Selvaththirku Yaadhenin Veghkaamai
Vendum Pirankai Porul

Kural Explanation: If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness

Leave a Comment