குறள் 168

குறள் 168:

 

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
மு.வ உரை:
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.
கலைஞர் உரை:

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.


Kural 168


Azhukkaaru Enaoru Paavi Thiruchetru
Theeyuzhi Uyiththu Vidum

Kural Explanation: Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)

Leave a Comment