குறள் 154

குறள் 154:

 

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்
மு.வ உரை:
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.
கலைஞர் உரை:

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.


Kural 154


Niraiyudaimai Neengaamai Vendin Poraiyudaimai
Potri Ozhuga Padum

Kural Explanation: If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience

Leave a Comment