குறள் 1309

குறள் 1309:

 

நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது
மு.வ உரை:
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
சாலமன் பாப்பையா உரை:
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.
கலைஞர் உரை:

நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்.


Kural 1309


Neerum Nizhaladhu Inidhae Pulaviyum
Veezhunar Kannae Inidhu

Kural Explanation: Like water in the shade, dislike is delicious only in those who love

Leave a Comment