குறள் 1283

குறள் 1283:

 

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்
மு.வ உரை:
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.
சாலமன் பாப்பையா உரை:
என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.
கலைஞர் உரை:

என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.


Kural 1283


Penaadhu Petpave Seiyinum Konganaik
Kaanaa Thamaiyala Kan

Kural Explanation: Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him

Leave a Comment