குறள் 1242

குறள் 1242:

 

காத லவரிலர் ஆகநீ நோவது
பேதமை வாழியென் நெஞ்சு
மு.வ உரை:
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!
சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.
கலைஞர் உரை:

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.


Kural 1242


Kaadhal Avarilar Aaganee Novadhu
Pedhaimai Vaazhiyen Nenju

Kural Explanation: Is folly, fare thee well my heart!

Leave a Comment