குறள் 124

குறள் 124:

 

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
மு.வ உரை:
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
கலைஞர் உரை:

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.


Kural 124


Nilaiyin Thiriyaadhu Adangiyaan Thotram
Malaiyinum Maanap Peridhu

Kural Explanation: More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself

Leave a Comment