குறள் 1213

குறள் 1213:

 

நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்
மு.வ உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
கலைஞர் உரை:

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.


Kural 1213


Nanavinaal Nalgaa Thavaraik Kanavinaal
Kaandalin Unden Uyir

Kural Explanation: My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours

Leave a Comment