குறள் 1210

குறள் 1210:

 

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி
மு.வ உரை:
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
சாலமன் பாப்பையா உரை:
திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
கலைஞர் உரை:

நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.


Kural 1210


Vidaaadhu Sendraaraik Kanninaal Kaanap
Padaaadhi Vaazhi Madhi

Kural Explanation: May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul

Leave a Comment