குறள் 1196

குறள் 1196:

 

ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது
மு.வ உரை:
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.
கலைஞர் உரை:

காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.


Kural 1196


Oruthalaiyaan Innaadhu Kaamamkaap Pola
Iruthalai Yaanum Inidhu

Kural Explanation: Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.

Leave a Comment