குறள் 1180

குறள் 1180:

 

மறைபெறல் ஊராக் கரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து
மு.வ உரை:
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.
சாலமன் பாப்பையா உரை:
அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.
கலைஞர் உரை:

காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல.


Kural 1180


Maraiperal Ooraarkku Aridhandraal Empol
Araiparai Kannaar Agaththu

Kural Explanation: It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.

Leave a Comment