குறள் 1132

குறள் 1132:

 

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து
மு.வ உரை:
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
சாலமன் பாப்பையா உரை:
காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.
கலைஞர் உரை:

எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.


Kural 1132


Nonaa Udampum Uyirum Madalerum
Naaninai Neekki Niruththu

Kural Explanation: Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse

Leave a Comment