குறள் 108

குறள் 108:

 

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
மு.வ உரை:
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.
கலைஞர் உரை:

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.


Kural 108


Nandri Marappadhu Nandrandru Nandralladhu
Andrae Marappadhu Nandru

Kural Explanation: It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted)

Leave a Comment