குறள் 1061

குறள் 1061:

 

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்
மு.வ உரை:
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.
கலைஞர் உரை:

இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.


Kural 1061


Karavaadhu Uvandheeyum Kannannaar Kannum
Iravaamai Kodi Urum

Kural Explanation: Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good

Leave a Comment