குறள் 1048

குறள் 1048:

 

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு
மு.வ உரை:
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
சாலமன் பாப்பையா உரை:
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?
கலைஞர் உரை:

கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.


Kural 1048


Indrum Varuvadhu Kollo Nerunalum
Kondradhu Polum Nirappu

Kural Explanation: Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?

Leave a Comment