குறள் 937

குறள் 937:

 

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் 
கழகத்துக் காலை புகின்
மு.வ உரை:
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.
கலைஞர் உரை:

சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.


Kural 937


Pazhagiya Selvamum Panbum Kedukkum
Kazhagaththuk Kaalai Pugin

Kural Explanation: To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character

Leave a Comment