குறள் 918

குறள் 918:

 

ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு
மு.வ உரை:
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.
கலைஞர் உரை:

வஞ்சக எண்ணங்கொண்ட “பொதுமகள்” ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட “மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள்.


Kural 918


Aayum Arivinar Allaarkku Anangenba
Maaya Magalir Muyakku

Kural Explanation: The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female

Leave a Comment