குறள் 67

குறள் 67:

 

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
மு.வ உரை:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
கலைஞர் உரை:

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.


Kural 67


Thandhai Magarkaatrum Nandri Avaiyaththu
Mundhi Iruppa Seyal

Kural Explanation: The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned

Leave a Comment