குறள் 66

குறள் 66:

 

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
மு.வ உரை:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
கலைஞர் உரை:

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.


Kural 66


Kuzhal Inidhu Yaazhinidhu Enbadham Makkal
Mazhalaisol Kelaa Thavar

Kural Explanation: "The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children

Leave a Comment