குறள் 650

குறள் 650:

 

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்
மு.வ உரை:
தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை:
தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.
கலைஞர் உரை:

கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.


Kural 650


Inaruzhththum Naaraa Malaranaiyar Katradhu
Unara Viriththuraiyaa Thaar

Kural Explanation: Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance

Leave a Comment