குறள் 603

குறள் 603:

 

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து
மு.வ உரை:
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.
கலைஞர் உரை:

அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.


Kural 603


Madimadik Kondozhukum Pedhai Pirandha
Kudimadiyum Thanninum Mundhu

Kural Explanation: The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead

Leave a Comment