குறள் 518

குறள் 518:

 

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்
மு.வ உரை:
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.
கலைஞர் உரை:

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.


Kural 518


Vinaikurimai Naadiya Pindrai Avanai
Adharkuriya Naaga Seyal

Kural Explanation: Having considered what work a man is fit for, let (the king) employ him in that work

Leave a Comment