குறள் 517

குறள் 517:

 

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்
மு.வ உரை:
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.
கலைஞர் உரை:

ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.


Kural 517


Ithanai Ithanaal Ivanmudikkum Endraaindhu
Adhanai Avankan Vidal

Kural Explanation: After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty

Leave a Comment