குறள் 488

குறள் 488:

 

செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலை
மு.வ உரை:
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.
கலைஞர் உரை:

பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.


Kural 488


Serunarai Kaanin Sumakka Iruvarai
Kaanin Kizhakkaan Thalai

Kural Explanation: If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low

Leave a Comment