குறள் 418

குறள் 418:

 

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி
மு.வ உரை:
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
சாலமன் பாப்பையா உரை:
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
கலைஞர் உரை:

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.


Kural 418


Ketpinung Kelaath Thagaiyavae Kelviyaal
Thotka Padaatha Sevi

Kural Explanation: The ear which has not been bored by instruction, although it hears, is deaf

Leave a Comment