குறள் 391

குறள் 391:

 

கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக
மு.வ உரை:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.
கலைஞர் உரை:

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.


Kural 391


Karka Kasadara Karpavai Katrapin
Nirka Adharku Thaga

Kural Explanation: Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning

Leave a Comment