குறள் 296

குறள் 296:

 

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்
மு.வ உரை:
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.
கலைஞர் உரை:

பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.


Kural 296


Poiyaamai Anna Pugazhillai Eyyaamai
Ellaa Aramun Tharum

Kural Explanation: There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue

Leave a Comment