குறள் 290

குறள் 290:

 

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் 
தள்ளாது புத்தே ளுலகு
மு.வ உரை:
களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
சாலமன் பாப்பையா உரை:
திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.
கலைஞர் உரை:

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.


Kural 290


Kalvaarkku Thallum Uyirnilai Kalaarkku
Thallaadhu Puththel Ulagu

Kural Explanation: Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud

Leave a Comment