குறள் 286

குறள் 286:

 

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்
மு.வ உரை:
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.
கலைஞர் உரை:

ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.


Kural 286


Alavinkan Nindrozhukal Aatraar Kalavinkan
Kandriya Kaadha Lavar

Kural Explanation: They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others

Leave a Comment