குறள் 1214

குறள் 1214:

 

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு
மு.வ உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.
கலைஞர் உரை:

நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.


Kural 1214


Kanavinaan Undaakum Kaamam Nanavinaan
Nalgaarai Naadith Thararku

Kural Explanation: There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness

Leave a Comment